12 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவர் கைது

12 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தவர் கைது
12 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம்  பார்த்தவர் கைது

உசிலம்பட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில்  உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, எழுமலை வட்டார மருத்துவர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் டி.கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் ஹரிலால் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் குறித்து அவரிடம் கேட்ட போது “  ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளதாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.  அந்த சான்றுகளின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com