தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் வழக்கம் போல மாணவிகளே அதிகமாக தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்பட்டது. அரசின் இணைய தளங்களிலும் மாணவர்களின் செல்போன்கள் வழியாகவும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டது. வழக்கம் போல மாணவிகளே இந்த தேர்விலும் அதிகமாகத் தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது.