ராக்கிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை?

ராக்கிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை?
ராக்கிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை?

திருச்சி மாவட்டம் நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ரஞ்சித், சக மாணவர்களின் ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் ரஞ்சித் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்தை சக மாணவர்கள் தாக்கியதில் அவரது கை உடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என ஆசிரியர்கள் உறுதி அளித்திருக்கின்றனர்.

இதனையடுத்து படிப்பை தொடர்ந்த ரஞ்சித்தை மீண்டும் சில மாணவர்கள் ராக்கிங் செய்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரஞ்சித் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையினர் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்தின் தற்கொலைக்கு காரணமான மாணவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com