ஜூன் 20 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்

ஜூன் 20 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்

ஜூன் 20 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்
Published on

பயணிகள் வருகை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு, ஜூன் 20ம் தேதி முதல் சில சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

ஜூன் 20 ம் தேதி முதல், எழும்பூர் – ராமேஸ்வரம்; கோவை – நாகர்கோவில்; மதுரை – திருவனந்தபும்; சென்னை – கொல்லம் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் எழும்பூரிலிருந்து, தஞ்சை – கொல்லம் – ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்ட்ரலிலிருந்து கோவை – ஆலபுலா – மேட்டுப்பாளையம் – திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் இயக்கப்படும்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்களில், இந்த 10 சிறப்பு ரயில்கள் மட்டும் இருவழிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com