தவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு ?

தவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு ?
தவறான கை வைத்தியம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு ?

வேலூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 9 மாத குழந்தைக்கு நாட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. 

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி - இளவரசி தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை பிரத்திவிராஜ். இந்தக் குழந்தைக்கு 15 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகும் காய்ச்சல் நீடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு நாட்டு மருந்து கசாயம் கொடுக்கக்கோரி உறவினர்கள் கூறியுள்ளனர். 

அதன்படி, பெற்றோரும் தாழையாத்தம் பகுதியிலுள்ள நாட்டு மருந்து கடையில் இருந்து மருந்துகளை வாங்கி தாங்களாகவே மருந்து தயாரித்துக் கொடுத்துள்ளனர். நாட்டு மருத்து கொடுத்த பின்னரும் குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. அதுமட்டுமின்றி குழந்தைக்குக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அதற்குள்ளாகவே குழந்தை உயிரிழந்துவிட்டது. இந்நிலையில் நாட்டு மருந்தை தவறாக கொடுத்ததால் தான் குழந்தை உயிரிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com