சண்டையில் திருடப்பட்ட 10 லட்சம் ரூபாய் செல்போன் !

சண்டையில் திருடப்பட்ட 10 லட்சம் ரூபாய் செல்போன் !

சண்டையில் திருடப்பட்ட 10 லட்சம் ரூபாய் செல்போன் !
Published on

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செல்போன் கடை உரிமையாளரை மிரட்டி, கடையில் இருந்த செல்போன்களை இளைஞர்கள் சிலர் திருடும் காட்சி வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாலிக் என்பவர் தனது மாமியாருக்கு சொந்தமான இடத்தில், கடை கட்டி 14 ஆண்டுகளாக செல்போன் விற்பனை செய்து வருகிறார். அவரின் மாமியார் அந்த இடத்தை, அறங்குடியைச் சேர்ந்த இதயதுல்லா என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. மாமியாருக்குச் சொந்தமான இடம் என்றாலும், கடையை தாமே கட்டியதாகவும், அதற்காக தொகையை கொடுத்தால் கடையை காலி செய்வதாக மாலிக் கூறியதாக தெரிகிறது. 

இந்த பிரச்னை தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருப்பதாகத் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 22ஆம் தேதி, இளைஞர்கள் சிலர் மாலிக்கின் கடைக்குச் சென்று அவரின் மகனை மிரட்டியதுடன் அங்கிருந்த விலை உயர்த்த போன்களை எடுத்துச் சென்றதாக மாலிக் புகார் அளித்துள்ளார். 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டுவிட்டதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவையும் , அடியாட்கள் கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com