தமிழகத்தில் தொடரும் பருவமழை - 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் தொடரும் பருவமழை - 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் தொடரும் பருவமழை - 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Published on

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் - அருண் ராய், திருச்சி - ஜெயகாந்தன், வேலூர் - நந்தகுமார், நாகை - பாஸ்கரன், மதுரை - வெங்கடேஷ், ராணிப்பேட்டை - செல்வராஜ், திருவள்ளூர் - அனந்தகுமார், அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம், விருதுநகர் - காமராஜ், ஈரோடு - பிராபகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுவர் என்றும் தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com