அடுத்தடுத்து உயிரிழந்த 10 மாடுகள்: அதிர்ச்சியான உரிமையாளர்கள் போலீசில் புகார்

அடுத்தடுத்து உயிரிழந்த 10 மாடுகள்: அதிர்ச்சியான உரிமையாளர்கள் போலீசில் புகார்
அடுத்தடுத்து உயிரிழந்த 10 மாடுகள்: அதிர்ச்சியான உரிமையாளர்கள் போலீசில் புகார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்து 10 மாடுகள் உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தேவராஜபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், ராமசாமி உள்ளிட்ட ஏழு பேர்களின் மாடுகள் நேற்று மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயல்வெளி பகுதிக்குச் சென்றுள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீண்டும் வீடு திரும்பும்போது வயல்வெளியில் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 10 மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்தது. தகவலறிந்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் இறந்து கிடந்த மாடுகளை மீட்டனர்.

மின்சாரத் துறையின் மெத்தன போக்கினால் ஒயர்கள் அறுந்து விழுந்து மாடுகள் இருந்துள்ளதாகவும், தங்களுக்கு உரிய இழப்பீடு மின்சாரத்துறை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட மக்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com