புதிய குடும்ப அட்டை பெற 10.54 லட்சம் பேர் விண்ணப்பம்

புதிய குடும்ப அட்டை பெற 10.54 லட்சம் பேர் விண்ணப்பம்

புதிய குடும்ப அட்டை பெற 10.54 லட்சம் பேர் விண்ணப்பம்
Published on

மே மாதம் முதல் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை, புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2 லட்சத்து 61 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 6 லட்சத்து 65ஆயிரத்து 102 விண்ணப்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், 63 ஆயிரத்து 601 குடும்ப அட்டைகளை அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 63 ஆயிரத்து 780 விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com