மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

நகைக்கடை உரிமையாளரின் வீடு மற்றும் நகைக்கடையில் இருந்து கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்விஜய். இவர் மார்த்தாண்டம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை விரிகோட்டில் உள்ள அவரது வீட்டின் மாடியில் ஏறி அங்குள்ள கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து பூஜை அறையில் வைத்திருந்த 55 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த நகைக்கடையின் சாவியை எடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள நகை கடைக்குச் சென்று அங்கிருந்த ஒரு கிலோ மதிப்பிலான தங்க நகையையும் கொள்ளை அடித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர் பொன்விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரையடுத்து தக்கலை சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடை மற்றும் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோல ஒரு நகைக்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com