“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி

“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி

“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்பிதுரை பேட்டி
Published on

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் அனைவருக்கும் வாழ்த்து சொல்வார் என்றும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தின் தனது இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை அதிமுக எம்.பி தம்பிதுரை தொடங்கியுள்ளார். இதில், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளான அமையபுரம், நல்லாம்பிள்ளை, அணியாப்பூர் உள்ளிட்ட 19 ஊராட்சிகளை சேர்ந்த 48 கிராமங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இத்தனை நாள்கள் தளபதி எங்கிருந்தார், போர்வாள் எங்கிருந்தது என அனைவருக்கும் தெரியும். இதுவரை தளபதியிடம் போர்வாள் இல்லையா?, போர்வாளிடம் தளபதி இல்லையா? கூட்டணி தொகுதி ஒதுக்கீடுக்கு பின் அவர் போர்வாள் கொடுப்பாரா? தளபதி இருப்பாரா? எனத் தெரியும்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு ப.சிதம்பரம் மீது எடுத்துள்ள நடவடிக்கையால் அவர் பிதற்றுகிறார். கூட்டணிக்காக யார் யாரையும் மிரட்டுவது இல்லை. ரஜினிகாந்த் அனைவருக்கும் வாழ்த்து செல்லுவார். அவர் நல்ல மனிதர். பாஜக, அதிமுக கூட்டணியில் யார் தலைமை என்ற கேள்விக்கு, கூட்டணியின் தலைமை குறித்து போக போக தெரியும். கூட்டணி தலைமை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறும். இங்கு அதிமுக கூட்டணியில் கட்சிகள் ஒருக்கிணைப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com