திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தில்லைநகர், உறையூர், மரக்கடை, சிந்தாமணி, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய்களை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. திருச்சி உறையூர்பாளையம் பஜாரில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டிவைத்து, புனரமைப்பு பணிகளைத் தொடங்கிவைத்தார்.