மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி  இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனுவுக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் மீது வாதத்தை முன்வைக்க வேண்டியிருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க மாறன் சகோதரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு (டிச.11) ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மாறன் சகோதரர்கள் இன்று ஆஜராகததால் வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு (டிச.15) ஒத்திவைத்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மாறன் சகோதரர்களின் கோரிக்கை குறித்து வரும் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com