சென்னையில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைப்பு

சென்னையில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைப்பு
சென்னையில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைப்பு

சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் படை, கட்டப் பஞ்சாயத்துகளை கண்காணித்து தடுப்பது மட்டுமின்றி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவதாக கருதப்படும் இடங்களில் 20 நாட்களாக சிறப்பு படை கண்காணித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com