‘பஸ் ஸ்டிரைக்’ முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை

‘பஸ் ஸ்டிரைக்’ முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை

‘பஸ் ஸ்டிரைக்’ முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை
Published on

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com