சாலையில் கொட்டப்படும் தக்காளி ! வேதனையில் விவசாயிகள்

சாலையில் கொட்டப்படும் தக்காளி ! வேதனையில் விவசாயிகள்

சாலையில் கொட்டப்படும் தக்காளி ! வேதனையில் விவசாயிகள்
Published on

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயி‌கள் விரக்தியில் சாலையில் கொட்டிச்சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் தக்காளியை விவசாயிகள் சாலையில் கொட்டிச்சென்றனர். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 500க்கும் அதிகமான ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அறுவடைக் கூலி, பராமரிப்பு செலவுக்கு கூட கிடைக்காததால் தக்காளி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளியில் விற்பனைக்கு கொண்டுவந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில் சாலையில் அவற்றை கொட்டிவிட்டு விரக்தியோடு விவசாயிகள் வீடு திரும்பினர். விலை வீழ்ச்சியால் பல இடங்களில் தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் செடியிலேயே விட்டுவிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com