“ரஹானேவுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு... ஆனால்...” - ஜாகீர் கான்

“ரஹானேவுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு... ஆனால்...” - ஜாகீர் கான்
“ரஹானேவுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு... ஆனால்...”  - ஜாகீர் கான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஃபார்ம் அவுட்டாகி உள்ள ரகானே விளையாட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாளை இந்திய அணி இங்கிலாந்து உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட உள்ளது. 

“ரகானே இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் கொடுக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் அணியின் போக்கை வைத்து பார்க்கும் போது அவர் நிச்சயம் கடைசி டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார் என்றே எண்ண செய்கிறது. 

இந்திய அணி கடந்த போட்டியில் பெற்ற வெற்றியுடன் இந்த போட்டியை விளையாட உள்ளது. அப்படி இந்த ஆட்டத்தை அணுகும் போது அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அது உத்வேகம் கொடுக்கும். அதே நேரத்தில் சரியான ஃபார்மில் இல்லாத வீரருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக அணி செயல்படலாம். அணியின் பேட்டிங் பில்லர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் திறன் மீது அணிக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூட சொல்லி அந்த வீரருக்கு உத்வேகம் கொடுக்கலாம். அப்படி நடந்தால் ரகானே நிச்சயம் விளையாடுவார். 

வீரர்களை மாற்றுவது இந்திய அணிக்கு பவுலிங்கில் கைகொடுத்து வருகிறது. அதே போன்ற மாற்றத்தை பேட்டிங்கில் கொண்டு வர ஏனோ தயக்கம் காட்டி வருகிறது. இல்லையென்றால் ரகானே நான்காவது போட்டியிலேயே ஆடும் லெவனில் இடம் பெற்றிருக்க மாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார். 

ரகானே இந்த தொடரில் ஏழு இன்னிங்ஸ் விளையாடி 5, 1, 61, 18, 10, 14, 0 என மொத்தம் 109 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com