தோனி விலகியது சரியே: யுவராஜ் சிங்

தோனி விலகியது சரியே: யுவராஜ் சிங்

தோனி விலகியது சரியே: யுவராஜ் சிங்
Published on

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது சரியான முடிவு என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய யுவராஜ் சிங், தோனியின் தலைமையின் கீழ் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தது. எல்லா கேப்டன்களாலும் இந்த சாதனையை சாத்தியமாக்க முடியாது. கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக முடிவு செய்தது சரியானதே என்றார். 2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய அணி விராத் கோலி தலைமையில் தயாராகும் விதத்தில் தோனியின் முடிவு அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரசிங் தோனி, கடந்த 4ம் தேதி அறிவித்தார். அதேநேரம், இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் விராத் கோலி தலைமையிலான அணியில் இடம் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com