உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: மழையினால் முதல் நாள் ஆட்டம் ரத்து

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: மழையினால் முதல் நாள் ஆட்டம் ரத்து
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: மழையினால் முதல் நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரின் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. காலை முதலே அங்கு மழை பெய்து வந்த நிலையில் முதல் நாள் உணவு இடைவேளை வரை காத்திருந்து போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர் நடுவர்கள். 

முடிவில் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் கூட வீசப்படாமல் உள்ளது. மழை சூழலை கருத்தில் கொண்டு இந்தியா தனது ஆடும் லெவனில் மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com