"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டம் 3 போட்டிகளாக இருந்திருக்கலாம்" - சச்சின் கருத்து

"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டம் 3 போட்டிகளாக இருந்திருக்கலாம்" - சச்சின் கருத்து
"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டம் 3 போட்டிகளாக இருந்திருக்கலாம்" - சச்சின் கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 3 ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை ஏற்கெனவே இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துவிட்டன. பல முன்னாள் வீரர்களும் இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் நடத்திருக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் " 50 ஓவர் அல்லது டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அணிகள் எப்படியாவது தங்களது க்ரூப்பில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறை மோதிவிடும். பின்பு காலிறுதி, அரையிறுதி என செல்லும். அப்போது ஒரு அணிக்கு முழுமையாக விளையாடிய திருப்தி இருக்கும். அப்போது ஒரே ஒரு இறுதிப் போட்டி நடத்துவது சரியாக இருக்கும். ஆனால் இதில் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள், இங்கிலாந்துடன் 4 போட்டிகள் விளையாடிவிட்டு, இப்போது ஒரே ஒரு இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடுவது சரி எனப்படவில்லை" என்றார் அவர்.

மேலும் பேசிய சச்சின் டெண்டுல்கர் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடராக அமைந்திருக்க வேண்டுமே தவிர, தனியொரு போட்டியாக இருக்கக் கூடாது. அப்போதுதான் இரு அணிகளின் முழுமையான பலம் வெளிப்பட்டு இருக்கும். இப்போது முதல் முறை என்பதால் ஐசிசி பல விஷயங்களை யோசித்திருக்காது. இந்தப் போட்டி முடிந்ததும் அடுத்த முறை தொடர் போல நடத்த ஐசிசி யோசிக்கலாம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com