WTC இறுதி போட்டி : மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது - ஐசிசி

WTC இறுதி போட்டி : மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது - ஐசிசி
WTC இறுதி போட்டி : மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது - ஐசிசி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சாரல் மழை காரணமாக ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதனால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன்ஒரு பந்து கூட வீசாமல் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் கூட இன்னும் போடப்படாமல் உள்ளது. மதிய இடைவேளைக்கு பிறகு அடுத்த முடிவை ஐசிசி எடுக்கும் என தெரிகிறது. இந்த மழையை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே முறையை ஐசிசி இந்த போட்டியில் எடுத்துள்ளது. அதன் மூலம் இன்று தடைபட்டுள்ள செஷன் அன்றைய தினம் நடைபெறும். 

இந்நிலையில் ஐசிசியை பலரும் சாடி வருகின்றனர். இங்கிலாந்தில் இந்த சீசனில் மழை பொழிவு இருக்கும் என தெரிந்து ஏன் போட்டியை அங்கு நடத்த வேண்டும் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com