"பெங்களூர் அணி இந்தாண்டு வேறு மாதிரி இருக்கிறது" ஏபி டி வில்லியர்ஸ் !

"பெங்களூர் அணி இந்தாண்டு வேறு மாதிரி இருக்கிறது" ஏபி டி வில்லியர்ஸ் !
"பெங்களூர் அணி இந்தாண்டு வேறு மாதிரி இருக்கிறது" ஏபி டி வில்லியர்ஸ் !

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி புது மாதிரியாக இருக்கும் என்று ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ்.

"ஆர்சிபி போல்ட் டைரிஸ்" நிகழ்ச்சியில் பேசிய டி வில்லியர்ஸ் "ஒவ்வொரு ஆண்டும் இந்தாண்டு அணி சூப்பர் பிரமாதமாக இருக்கிறது என சொல்வோம். ஆனால் இந்தாண்டு சொல்கிறேன் சத்தியமாக ஆர்சிபி அணி வேறு மாதிரியாக இருக்கிறது. இப்போதைக்கு அதான் சொல்ல முடியும். மிகச் சிறந்த அணி இது என சொல்லமாட்டேன். ஆனால் அணியில் இப்போது ஒரு புத்துணர்ச்சி நிலவுகிறது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.

மேலும் பேசிய அவர் "அணி கலவை சிறப்பாக இருக்கிறது. அதனால் போட்டிக்கு சிறந்த 11 பேர் அணியை எங்களால் தேர்வு செய்ய முடியும். அனைத்து முக்கிய வீரர்களும் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார்கள். வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டாலும் அவர்களின் இடத்தில் வேறு சிறப்பான வீரரை விளையாட வைக்க முடியும். ஆர்சிபி வீரர்கள் கடுமையான உழைப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அணியை சிறப்பாக வழி நடக்க முக்கிய காரணமே விராட் கோலிதான்" என்றார் டி வில்லியர்ஸ் நம்பிக்கையாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com