மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?
மகளிர் உலகக்கோப்பை கிரிக்., இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி?

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகள் இடையிலான போட்டி இங்கிலாந்தின் டர்பி நகரில் நாளை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இதுவரை 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 8 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. நாளை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான வெற்றி வாய்ப்பு உள்ளது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com