13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் மகளிர் அணி!

13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் மகளிர் அணி!

13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் மகளிர் அணி!
Published on

கடந்த 2009, மார்ச் 14 அன்று மகளிர் உலகக் கோப்பை தொடரில் கடைசியாக வெற்றியை பதிவு செய்திருந்தது பாகிஸ்தான் அணி. அதன் பிறகு 17 ஆட்டங்கள் விளையாடியும் அந்த அணியால் 50 ஓவர் உலக கோப்பை அரங்கில் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான். மழை காரணமாக இந்த ஆட்டம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 

இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு உதவுவதை காட்டிலும் அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. 

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகள் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளன. அதில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. தென்னாப்பிரிக்க அணி இதுவரை இந்த தொடரில் வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com