அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா? தோனி சூசக பதில்!

அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா? தோனி சூசக பதில்!
அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா? தோனி சூசக பதில்!

அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சூசகமாக பதிலளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பை துறந்த மகேந்திர சிங் தோனி, அதை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சோபிக்காத சென்னை அணி இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்தது. தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறி கேப்டன் பொறுப்பை தோனியிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார் ஜடேஜா. இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் களம் இறங்கியது.

கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த பிறகு அவரிடம் அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இந்த மஞ்சள் ஜெர்சியோ அல்லது வேறு மஞ்சள் ஜெர்சியோ எதுவாக இருந்தாலும் (அடுத்த ஆண்டு) நீங்கள் நிச்சயமாக என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள்” என்று கூறினார். பிளேயராகவோ அல்லது சென்னை அணியில் வேறு ஒருவராகவோ எப்படி இருப்பது என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com