மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள்போட்டி!வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்திய அணி?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள்போட்டி!வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்திய அணி?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள்போட்டி!வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்திய அணி?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் துவங்க உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு ட்ரினிடாட் நகரத்தில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களமிறங்க உள்ளது.

வழக்கமாக இந்திய அணியின் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அல்லது சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை டிடி ஸ்போர்ட்ஸ் வாங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தூர்தர்ஷனில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com