இந்தியாவுடன் தோல்வி: ஆஸி. அணியில் அதிரடி மாற்றம்!

இந்தியாவுடன் தோல்வி: ஆஸி. அணியில் அதிரடி மாற்றம்!

இந்தியாவுடன் தோல்வி: ஆஸி. அணியில் அதிரடி மாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி, தோல்வி அடைந்ததால், இலங்கை எதிரான தொடருக்காக அந்த அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், 24-ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

(வில் புகோவ்ஸ்கி)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த அந்த அணியில், ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

(ஜோ பர்ன்ஸ், ரென் ஷா)

இவர்களுக்கு பதிலாக ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மற்றும் புதுமுகம், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர். 20 வயதான புகோவ்ஸ்கி முதல்தர போட்டியில் 243 ரன்கள் குவித்து அசத்தியதை அடுத்து அவர் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com