கொல்கத்தா V/S சிஎஸ்கே - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்

கொல்கத்தா V/S சிஎஸ்கே - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்

கொல்கத்தா V/S சிஎஸ்கே - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்
Published on

கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகள் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் நிலவி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களுர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி விளையாடியது. கிறிஸ் லின் (43), உத்தப்பா (33), நிதிஷ் ரானா (37) ரன்கள் விளாசினர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு சற்று குறைந்திருந்தது. 

எனினும் கொல்கத்தா அணியை தோல்வியிலிருந்த மீட்க ரஸல் அதிரடி காட்ட தொடங்கினார். குறிப்பாக அவர் 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசினார். மேலும் சவுதி வீசிய 19வது ஓவரிலும் 4 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் ரஸல். இறுதியில் ரஸல் 13 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 48 ரன்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில் ரஸலின் அதிரடி ஆட்டம் தொடர்பாக சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில், “ரஸல் ஒரு நைட்மேர்” எனப் பதிவிட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில், “இன்னும் மூணு நாள்ல மீட் பண்ணலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com