‘கேதார் ஜாதவ் குறித்து தோனி பேசாதது ஏன்?’ பிரக்யா ஓஜா கேள்வி

‘கேதார் ஜாதவ் குறித்து தோனி பேசாதது ஏன்?’ பிரக்யா ஓஜா கேள்வி
‘கேதார் ஜாதவ் குறித்து தோனி பேசாதது ஏன்?’ பிரக்யா ஓஜா கேள்வி

ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லாததால் தான் அனுபவ வீரர்களை ஆடும் லெவனிலிருந்து வெளியேற்ற முடியவில்லை என சொல்லியிருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

“இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என சொன்ன தோனி கேதார் ஜாதவ் குறித்து பேசாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா.

“இளம் வீரர்கள் என தோனி யாரை குறிப்பிடுகிறார்? ருதுராஜ் கெய்க்கவாட் மற்றும் ஜெகதீசனை குறிப்பிட்டு சொல்கிறாரா? கேதார் ஜாதவ் குறித்து அவர் பேச வேண்டும். 

எனக்கு தெரிந்து நிச்சயமாக தோனி, ருதுராஜ் மற்றும் ஜெகதீசனை சொல்லியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன். ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் அவர்கள் விளையாடியதை வைத்து அவர்களது ஆட்டத்திறனை எடைபோட முடியாது. 

ஒருவேளை தோனி அவர்கள் இருவரையும் குறிப்பிட்டு சொல்லியிருந்தால் நான் அவரது கருத்துக்கு சார்பாக நிற்க மாட்டேன்” என ஓஜா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com