'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு

'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு
'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு

ஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான கோப்பையை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனானது. ஏற்கெனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010,2011 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இப்போது மூன்றாவது முறையும் சிஎஸ்கே அணி சாம்பியனானது.

இந்த வெற்றிக் குறித்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான விரேந்திர சேவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி்ட்டுள்ளார் அதில் " நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க. உலகிலேயே மிகபிரமாண்டமான டி20 போட்டியான ஐபிஎல் கிரிக்கெட்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு
வாழ்த்துகள். இந்தப் போட்டித் தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்த வெற்றி அருமையான சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமையானது" என பாராட்டியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com