நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக, நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோருக்குப் பதிலாக மாா்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் இணைந்திருந்தனா். இதில் 1 பவுண்டரி உடன் 7 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்த ஆல்-ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திரா, இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவராக இருந்தார். ஏனெனில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் நியூசிலாந்துக்காக விளையாடுவது புதிதல்ல. இஷ் சோதி, ஜீதன் படேல், ஜீத் ராவல் போன்றவர்கள் அவ்வரிசையில் உள்ளவர்கள்தான்.