ஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து!

ஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து!
ஆஸி.யை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வொயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி தீவிரமாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, ஐசிசி தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. பேட் டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வலுவாக இருந்த அணி, 34 வருடத்துக்குப் பிறகு ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக் கிறது. இது ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் இன்று கடைசி ஒரு நாள் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியையும் வென்று ஆஸ்திரேலியாவை ’வொயிட்வாஷ்’ ஆக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இருக்கிறது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராயில் இருந்து ஆறாவது வீரராக களமிறங் கும் பட்லர் வரை அனைவருமே ஃபார்மில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை திணறடிக்கிறார்கள். இதனால் இன்றைய போட்டி யிலும் வெற்றி பெறும் தெம்பில் இருக்கிறது இங்கிலாந்து!

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில், ஆரோன் பின்சும் ஷான் மார்ஷூம் கடந்த போட்டியில் சதமடித்திருக்கிறார்கள். டிராவிஸ் கெட், அலெக்ஸ் கேரி, ஸ்டொயின்ஸ் என சிறந்த வீரர்கள் இருந்தாலும் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. இன்றைய போட்டியில் முன்னணி வீரர்கள் கடைசிவரை நின்று ஆடினால், ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. 

‘’வொயிட்வாஷ்’ செய்வதில் இருந்து அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடி ஏதும் இல்லை. கடந்த போட்டிகளை விட இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்றே நினைக்கிறோம்’ என்கிறார் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com