நல்லா விளையாடியும் இப்படியாயிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு!

நல்லா விளையாடியும் இப்படியாயிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு!

நல்லா விளையாடியும் இப்படியாயிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு!
Published on

வெற்றிக்காக கடுமையாகப் போராடினோம் என்று ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேனே வில்லியசன் கூறினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியுடன் நேற்று மோதிய சிஎஸ்கே, டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் முதலில் தடுமாறி பிறகு விளாசியதால், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 36 பந்துகளில் 47 ரன்களும் யூசுப் பதான் 25 பந்துகளில் 45 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். சென்னைத் தரப்பில் நிகிடி, தாகூர், கரண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் ரன் குவிக்கத் திணறியது. டு பிளிசிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷேன் வாட்சனுடன், சுரேஷ் ரெய்னா இணைந்த பின் போட்டியில் புயல் கிளம்பியது. வாட்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். சந்தீப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரெய்னா 32 ரன்களில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த வாட்சன் 51 பந்துகளில் சதமடித்தார்.

இந்த ஐபில் தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும் தோல்வியடைந்த ஐதராபாத் அணிக்கு 12.5 கோடியும் வழங்கப்பட்டது.  

தனது அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்ட ஐதராபாத் அணி கேப்டன் கேனே வில்லியம்சன் கூறும்போது, ‘நாங்கள் எடுத்த ஸ்கோர் சிறந்தது என்று நினைத்தோம். ஆனால் பிட்ச் மாறிவிட்டது. முதல் ஐந்து, ஆறு ஓவர்களில் குறைந்த ரன்களை எடுத்தோம்.  அதன்பிறகு நல்ல ஸ்கோரை எடுத்தது சிறப்பானது. ஆனால் வாட்சனுக்கு, ஹேட்ஸ் ஆஃப். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வாழ்த்துகள். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம். வீரர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினார்கள். கடுமையாகப் போராடினோம். எங்களிடம் சிறந்து பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதுதான் எங்கள் அணியின் சொத்து. பேட்டிங், பந்துவீச்சு இரண்டையும் பேலன்ஸ் பண்ணுவது தான் சவாலானது. என்னுடைய ஆட்டம் பற்றி கேட்கிறீர்கள். கேப்டனாக இருந்தால், நீங்களும் சிறப்பான பங்களிப்பை செய்ய வேண்டும். அதனால் நானும் ரசித்து ஆடினேன். இந்தத் தொடர் முழுவதும் நான் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்திருக்கிறேன். எங்கள் அணி கூட்டாகவே முயற்சி செய்தது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com