“உலகின் தலைசிறந்த அணியான இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால்” - ஜோ ரூட்!

“உலகின் தலைசிறந்த அணியான இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால்” - ஜோ ரூட்!

“உலகின் தலைசிறந்த அணியான இந்தியாவை சொந்த மண்ணில் சந்திப்பது சவால்” - ஜோ ரூட்!
Published on

இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று  முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் இதனை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். 

“உலகின் தலைசிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதென்பது சவாலான காரியம். அவர்களுக்கு எதிராக நாங்கள் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளோம். இந்திய மண்ணில் எங்கள் ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியாவை எங்களால் வெல்ல முடியும். அயலக மண்ணில் நாங்கள் தடுமாறி இருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றுள்ளது ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார் ரூட். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com