“2வது பேட்டிங் என்றால் சிறப்பாக விளையாடுவோம்” - ரோகித் ஷர்மா

“2வது பேட்டிங் என்றால் சிறப்பாக விளையாடுவோம்” - ரோகித் ஷர்மா
“2வது பேட்டிங் என்றால் சிறப்பாக விளையாடுவோம்” - ரோகித் ஷர்மா

தாங்கள் எப்போதும் 2வது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, இறுதிக் கோப்பைக்கு செல்வதற்காக தகுதிச்சுற்றின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பொதுவாகவே சென்னை மற்றும் மும்பை மோதும் போட்டி என்றால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மீம்ஸ் சண்டை பறக்கும். இதனால் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். 

இந்நிலையில் தகுதிச்சுற்றில் இரு அணிகளும் மோதுவதால் இன்று அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு லீக் போட்டிகளில் தோற்றுள்ளதால் இன்று சென்னை வெற்றி பெறவேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதற்கிடையே தங்கள் அணி தொடர்பாக பேசியுள்ள மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, “ஐபிஎல் என்பது கடைசியில் வணிக ரீதியாக முடிவடையும் என்பது நமக்கு தெரியும். இந்தத் தொடரில் எங்கள் அணி எப்போதும் 2வது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறது அல்லது போட்டியின் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடுகிறது. நாங்கள் மூன்று கோப்பைகளை இதுவரை வென்றுள்ளோம். எங்கள் அணியினர் வணிக ரீதியாக வெற்றி பெறுவார்கள்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com