“2015ம் ஆண்டிலேயே கோலி என்னிடம் பகிர்ந்ததுதான் இன்று நடக்கிறது” - ஆலன் டொனால்ட்

“2015ம் ஆண்டிலேயே கோலி என்னிடம் பகிர்ந்ததுதான் இன்று நடக்கிறது” - ஆலன் டொனால்ட்
“2015ம் ஆண்டிலேயே கோலி என்னிடம் பகிர்ந்ததுதான் இன்று நடக்கிறது” - ஆலன் டொனால்ட்

2015 ஆம் ஆண்டிலேயே உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய கிரிக்கெட் அணியை மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று விராட் கோலி தம்மிடம் கூறினார் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

"கிரிக்கெட் லைப் யூடியூப்" சேனலுக்கு பேசியுள்ளா ஆலன் டொனால்ட் "எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு என்னிடம் பேசிய கோலி. இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக உருவாக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என கூறினார். அதை இப்போது அவர் செய்து காட்டியிருக்கிறார். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் எதை நோக்கி செல்கிறார் என்பது கோலிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "இந்திய அணி முழுவதும் உடற்தகுதியுடன் இருக்கும் சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். உலகிலேயே சிறந்த அணியாக இருக்க வேண்டும். எந்தவொரு அணியையும் சொந்த நாட்டிலும் சரி வேறு வெளிநாடுகளிலும் தோற்க அடிக்க கூடிய திறன் இருக்க வேண்டும். பவுலிங்கில் மிகச் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று கோலி அப்போதே விரும்பினார்" என்றார் ஆலன் டொனால்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com