பங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்?

பங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்?

பங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்?
Published on

பங்களாதேஷூக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி, நவம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி டெல்லியிலும் இரண்டாவது போட்டி, ராஜ்கோட்டில் நவம்பர் 7 ஆம் தேதியும் மூன்றாவது போட்டி நாக்பூரில் 10 ஆம் தேதியும் நடக்கிறது. 

இந்த தொடருக்கான அணி தேர்வு வரும் 24 ஆம் தேதி நடக்கிறது. இந்திய கேப்டன் விராத் கோலி தொடர்ச்சியாக, விளையாடி வருவதால் பங்களாதேஷுக்கு எதிரான டி- 20 தொடரில், அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும் இதுபற்றி தேர்வுக் குழுவினர் அவரிடம் பேச உள்ளனர். அவர் விருப்பப்பட்டால் மட்டுமே ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com