கோலிக்கு ரெஸ்ட்: வழி நடத்துகிறார் ரஹானே!

கோலிக்கு ரெஸ்ட்: வழி நடத்துகிறார் ரஹானே!

கோலிக்கு ரெஸ்ட்: வழி நடத்துகிறார் ரஹானே!
Published on

இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில், 4 வகையான இந்திய அணியை இன்று தேர்வு செய்ய இருக்கிறார்கள். டெல்லியில் 2 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், அதைத் தொடர்ந்து நடக்கும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி, தென்னாப்பிரிக்க தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தேர்வு செயய்ப்பட இருக்கிறது.

தொடர்ந்து விளையாடி வரும் இந்திய கேப்டன் விராத் கோலிக்கு அடுத்து வரும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. அதனால் கடைசி டெஸ்ட்டுக்கு ரஹானே கேப்டனாக பொறுப்பேற்கிறார். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com