“இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் சர்வதேச கிரிக்கெட்டின் வல்லமை படைத்த வீரர்”-மார்க் டெய்லர்

“இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் சர்வதேச கிரிக்கெட்டின் வல்லமை படைத்த வீரர்”-மார்க் டெய்லர்
“இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் சர்வதேச கிரிக்கெட்டின் வல்லமை படைத்த வீரர்”-மார்க் டெய்லர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிதான் சர்வதேச கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் என பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர். 

“விராட் கோலி தான் சர்வதேச கிரிக்கெட்டின் சர்வ வல்லமை படைத்த பேட்ஸ்மேன் என கருதுகிறேன். அவரது ஆட்டத்தில் ஆகார்ஷமும், அதோடு சேர்ந்து நேர்த்தியும் இருக்கும். கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கின்ற அர்ப்பணிப்பின் வெளிப்பாடுதான் அது எனவும் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

சச்சின், லாரா மற்றும் இன்சமாம் உல் ஹாக் மாதிரியான தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடிய நேரத்தில் மார்க் டெய்லர் கிரிக்கெட்  விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலி டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டி மட்டும் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com