2 வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு !

2 வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு !

2 வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு !
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அங்கு 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

பின்னர் இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப் பிற்கு 169 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந் தப் போட் டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இறுதிப் போட்டி யாக மாறும். எனவே இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முந்தைய போட்டியை போலவே பீல்டிங்கை தேர்வு செய்தார். அணியில் மாற்றம் இல்லை. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இதிலும் ஆடுகிறார்கள்.

அணி விவரம்:
ரோகித் சர்மா, தவான், கோலி, ராகுல், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com