\
விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு பரிசான மணல் வீடு

விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு பரிசான மணல் வீடு

விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு பரிசான மணல் வீடு
Published on

விராட் கோலி, அனுஷ்கா சர்மா இளம் காதல் தம்பதியருக்கு கடற்கரை மணலில் சிற்பக்கலைஞர் ஒருவர் வீடு கட்டி பரிசளித்துள்ளார்.

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்களின் திருமணம் ரகசியமாக நடக்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதனை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திருமணம் செய்துக் கொண்டனர். அதற்காக புகைப்படங்களை பிறகு விராட் ட்விட்டரில் வெளியிட்டார்.

இதனிடையே ஒடிசாவை சார்ந்த சுதர்சன் பட்நாயக் என்ற சிற்பக்கலைஞர் இந்த இளம் தம்பதியருக்கு கடற்கரை மணலில் மிக அழகான மணல் வீடு வரைந்து பரிசத்துள்ளார். அதில் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து உள்ளதை போலவும் அதில் அனுஷ்கா, விராட் உருவம் பதிந்துள்ளதை போலவும் வடிவமைத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அனுஷ்கா ’இது மிக அழகாக உள்ளது. நாங்கள் இருவரும் சிறப்பாக இருக்கிறோம். ரொம்ப நன்றி’ என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் ஆங்கில ஊடங்கள் அனைத்தும் இந்த செய்தியை போட்டிப்போட்டு வெளியிட்டு உள்ளனர். 
 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com