டோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு தமிழக வீரர்கள் விஷ்ணு சரவணன், நேத்ரா தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு தமிழக வீரர்கள் விஷ்ணு சரவணன், நேத்ரா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு தமிழக வீரர்கள் விஷ்ணு சரவணன், நேத்ரா தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப் போட்டி பிரிவில் தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஒலிம்பிக்கில் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் நேத்ரா குமணன். 

வரும் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க தான் தமிழகத்தை சேர்ந்த இருவரும் தகுதி பெற்றுள்ளனர். 

விஷ்ணு Laser STD பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்திய பாய்மர படகுப் போட்டி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் நேத்ரா படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com