இந்தூர் கிரிக்கெட்: போலி டிக்கெட் விற்க முயன்ற 2 பேர் கைது

இந்தூர் கிரிக்கெட்: போலி டிக்கெட் விற்க முயன்ற 2 பேர் கைது
இந்தூர் கிரிக்கெட்: போலி டிக்கெட் விற்க முயன்ற 2 பேர் கைது

இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டதால் இன்றைய போட்டிக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான ரசிகர்கள் நேரடியாக போட்டியை காண ஆர்வம் கொண்டுள்ளனர்.இந்நிலையில் இந்தப் போட்டிக்கு போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற ரவீந்திர மிம்ரா (24), திராஜ் சர்வான் (23) ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போலி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com