இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..?

இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..?
இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..?

இந்தியா- தென்னாப்ரிக்க அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் இன்று நடைபெறுகிறது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும்  இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களம் காண்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாப்ரிக்க அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. முன்னணி வீரர்களின் விலகல் தென்னாப்ரிக்க அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com