டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடக்கம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடக்கம்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடக்கம்

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடி அணி வெற்றியுடன் தொடங்கியது. திண்டுக்கல் அணியுடனான விறுவிறுப்பு நிறைந்த ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.

சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 48 பந்துகளில் 69 ரன்களும், கவுஷிக் காந்தி 33 பந்துகளில் 46 ரன்களும் விளாசினார்.

பின்னர் விளையாடிய தூத்துக்குடி அணியின் தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 55 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். மத்திய வரிசையில் வீரர் விவேக் ராஜேந்திரன் 13 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை திண்டுக்கல் அணிக்கு ஏற்பட்டது. அந்த ஓவரை வீசிய அகாஷ் சும்ரா 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் ஒன்றையும் வீழ்த்தினார். திண்டுக்கல் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com