டிஎன்பிஎல் : சேப்பாக் அணி அசத்தல்

டிஎன்பிஎல் : சேப்பாக் அணி அசத்தல்

டிஎன்பிஎல் : சேப்பாக் அணி அசத்தல்

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருவள்ளூர் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் வீரன்ஸ் ‌அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ராஜகோபால் சதீஷ் 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சேப்பாக் அணியில், தொடக்க வீரர் சற்குணம், ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கார்த்திக், சரவணன், கோபிநாத் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் 4 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் சேப்பாக் அணி, 19-ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. கோபிநாத் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் சேர்த்தார். இன்று நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com