"சென்னை 'பிட்ச்' இப்போ வேற மாறி.. முதல் நாளே..." ரஹானே கணிப்பு!

"சென்னை 'பிட்ச்' இப்போ வேற மாறி.. முதல் நாளே..." ரஹானே கணிப்பு!
"சென்னை 'பிட்ச்' இப்போ வேற மாறி.. முதல் நாளே..." ரஹானே கணிப்பு!

முதல் டெஸ்ட் போட்டியை காட்டிலும் இப்போது 2ஆவது போட்டிக்கான பிட்ச் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே "கடந்த போட்டியை காட்டிலும் இந்த ஆட்டத்துக்கான பிட்ச் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் பிட்ச் முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்கும். நாளையப் போட்டியின் தொடக்கம் முதல் உணவு இடைவேளை வரை பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதல் டெஸ்ட் போட்டியில் நடந்ததை மறந்து இந்தப் போட்டியை எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இதுபோன்ற சூழல்கள் எங்களுக்கு புதிததல்ல. பிட்ச் தன்மையையும் நாங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். நாளைக்கான திட்டப்படி அதனை சரியாக செயல்படுத்தி விளையாட வேண்டும். முதல் டெஸ்ட்டில் நம்முடைய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்துவீசினார்கள். அதுவும் அஸ்வின் மிகச்சிறப்பாக செயல்பட்டார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com