"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்

"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்
"தூங்கும்போதுதான் அந்த இருவரும் பிரிவார்கள்"- ஆஸி பேட்ஸ்மேன்கள் குறித்து ஆரோன் ஃபின்ச் கிண்டல்

ஸ்டீவன் ஸ்மித்தும், மார்னஸ் லபுஷனேவும் தூங்கும்போதுதான் பிரிவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தும், மார்னஸ் லபுஷனேவும் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அளித்து சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஸ்மித்தும், லபுஷனேவும் ஆட்டமிழந்தார்கள்.

இது குறித்து கருத்து தெவித்த ஆரோன் ஃபின்ச், “ ஸ்மித்- லபுஷனே ஜோடி மிகவும் அபாரமாக விளையாடினார்கள். ஆனால் இறுதி வரை அவர்களால் வெற்றியை நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களின் பார்ட்னர்ஷிப் எப்போதும் அருமை. இவர்கள் ஆட்டக் களத்தில் பிரியவே மாட்டார்கள். எனக்கு தெரிந்தவரை இருவரும் தூங்கும்போதுதான் பிரிந்து செல்கிறார்கள்" என கிண்டலாக தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிக் குறித்து பேசிய ஃபின்ச் "இந்திய அணியில் இருப்பவர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் அனைத்தும் அபாரமாகவும் தரமாகவும் இருந்தது" என்றார். இவ்விரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com