நியூசிலாந்து அணியை பழிதீர்ப்பீர்களா? - விராட் கோலி பதில்

நியூசிலாந்து அணியை பழிதீர்ப்பீர்களா? - விராட் கோலி பதில்
நியூசிலாந்து அணியை பழிதீர்ப்பீர்களா? - விராட் கோலி பதில்

நியூசிலாந்து அணி மீது நல்ல மரியாதை வைத்துள்ளோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் போராடி தோற்றது. உலகக் கோப்பை தொடர் தொடங்கியது முதலே இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வந்ததால் நிச்சயம் கோப்பையை வென்றுவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இந்தியா முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், நான்காவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில்தான், இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி இந்தத் தொடரை சந்திக்கிறது.

போட்டி குறித்து செய்தியாளர்களிடம் இன்று விராட் கோலி பேசினார். அப்போது, நியூசிலாந்து அணியை பழி தீர்க்குமா இந்தியா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விராட் கோலி, “உண்மையில், நாம் பழிவாங்க நினைத்தாலும் கூட, அவர்கள் (நியூசிலாந்து) மிகவும் மென்மையானர்கள், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே வராது. நியூசிலாந்து வீரர்களுடன் நல்ல புரிதல் உள்ளது. களத்தில் இருக்கும் போது போட்டி போட்டு விளையாடுவோம், அவ்வளவுதான். சர்வதேச அளவில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அவர்கள் மீது நல்ல மரியாதை வைத்துள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com