"எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்கும்"- ரோஹித் சர்மா

"எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்கும்"- ரோஹித் சர்மா
"எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்கும்"- ரோஹித் சர்மா

வங்கதேசம் அணியுடனான நாளையப் போட்டியில் எங்கள் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்தியா நாளையப் போட்டியில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் "இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்கில்தான் சில மாற்றங்களை செய்ய வேண்டிய இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ராஜ்கோட் பிட்சை ஆராய வேண்டும். அதன் தன்மையை பொறுத்தே நாளையப் போட்டியில் அணித் தேர்வு இருக்கும். டெல்லியின் பிட்ச் நம்முடைய பவுலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. ஆனால் ராஜ்கோட் பிட்ச் எப்போதும் சிறப்பானதாகவே இருந்துள்ளது" என்றார்.

இது குறித்து மேலும் கூறிய ரோஹித் சர்மா "நாளைய போட்டியில் இந்திய அணியின் திட்டம் குறித்து தெரிவிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com